Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்

திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம்

Posted on April 3, 2025April 3, 2025 By வ.தங்கவேல் No Comments on திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம்

திமுக அரசு தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக வேறு செய்திகளை பூதாகரமாக்கி வெளியிட்டு வருகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தருமபுரியில் இன்று (ஏப்ரல் 02) தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று வழிபட்டனர். இதனையடுத்து பாஜகவினர் ஆலய கேட்டின் பூட்டை உடைத்துவிட்டதாக கே.பி.ராமலிங்கம் உட்பட கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர்.

அப்போது, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு அதன் ஊழல்களையும், கூட்டணி கட்சிகள் செய்துள்ள ஊழல்களையும் திசை திருப்புவதற்காக ஏதாவது ஒரு செய்தியை பூதாகரமாக்கி ஊடக விவாதங்களை திட்டமிட்டே பெரிதாக்கி வருகிறது. உதாரணமாக டாஸ்மாக் ஊழல், செல்வப்பெருந்தகை செய்துள்ள ஊழல், அண்ணா பல்கலை பாலியல் வழக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிதி வழங்குவதில் ஊழல் உள்ளிட்ட ஊழல்களை திசை திருப்புதவற்காக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடுவதாகவும் நாடகமாடி வருகிறார்கள். மேலும், மெட்ரிக் பள்ளிகள் மாநில அரசின் தடையில்லா சான்று பெற பள்ளிக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் சங்கம் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறைக்கவே ஊடகங்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது.

உலகம் முழுக்க உள்ள வல்லமையான அரசுகள் எல்லாம் இந்திய பிரதமரின் எண்ணங்களையும், லட்சியங்களையும் பின்பற்றும் வகையிலான அரசாக இந்திய அரசும், தலைவராக மோடியும் உள்ளார். அவர் தமிழகத்தில் நடக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும் நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அதற்காக திமுக-வை எதிர்க்கும் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும். கட்சி நலனை முக்கியமானதாகக் கருதாமல் தமிழகத்தின் நலனை முக்கியமானதாகக் கருதிட வேண்டும். தமிழக மக்களை ஊழல்வாதிகளிடம் இருந்தும், அதிகார துஷ்பிரயோகத்திடம் இருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். அதையொட்டியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்ற தகவல் பரவியிருக்கலாம். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், தருமபுரி மாவட்ட தலைவர் சி.சரவணன், தர்மபுரி நகரத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர் ஐஸ்வர்யம் முருகன், பாஜக இளைஞர் அணி தலைவர் மௌன குரு, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாடு

Post navigation

Previous Post: தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம்
Next Post: புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Related Posts

  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம் நாடு
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme