Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு

தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார்

Posted on March 1, 2025 By admin No Comments on தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் எஸ்.பி., மகேஸ்வரனிடம் புகார் அளிக்கப்பட்டது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தர்மச்செல்வன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அப்பொறுப்பிற்கு வந்து மூன்று நாட்கள் கூட முடிவடையாத நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதுப்பற்றிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதற்கு தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 28) திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் சரவணன் கூறியதாவது: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 26.02.2025 அன்று தருமபுரி நகரில் உள்ள அதியமான் அரங்கில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் திமுக புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசுகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும், நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இந்த மாவட்டத்தில் இருக்க மாட்டீர்கள் என்று அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆகவே இவர் பேசிய பேச்சு அரசு அதிகாரிகளை மட்டுமின்றி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வனை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வின்போது பாஜக நிர்வாகிகள் சூர்யா, தினேஷ், சதாசிவம், கணேசன், சக்திவேல், வெங்கடேசன், பிரபாவதி விமலா, ஹரிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Dharmapuri, #Oreynaadu

Post navigation

Previous Post: ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை
Next Post: 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு

Related Posts

  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme