Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை

Posted on February 22, 2025 By admin No Comments on தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி மூன்றாவது முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மை, நாகரீக பிணைப்பை கொண்டாடுவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட கலாச்சார நிகழ்வாகும்.

இரண்டு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்களிக்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1000 பேர் பங்கேற்கின்றனர். மகா கும்பமேளாவுடன் இணைந்து நடப்பதால் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 21) நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: இன்றைய மாலை, உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், மாண்புமிகு மத்திய மருத்துவத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா அவர்கள், மற்றும் உத்திரப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் அனைவருடன் கலந்து கொண்டதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, மூன்றாவது ஆண்டாக, இந்த வருடம், கயிலை மலையில் இருந்து தமிழகத்தின் பொதிகை மலைக்கு வந்த அகத்திய மாமுனிவரைப் போற்றும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம், அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, காசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதிக்கு இருக்கை என, தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

இன்று, தமிழகத்தில் இருந்து நமது சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தாய்மார்கள், சகோதரிகள், முத்ரா திட்டத்தின் பயனாளிகள் என 200 பேர், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது, அனைவருக்கும் மன நிறைவாக அமைந்தது. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்தியா Tags:#Annamalai, #Bjp, #Tamilnadu

Post navigation

Previous Post: தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்
Next Post: கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம்

Related Posts

  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் நாடு
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme