காஞ்சிபுரம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு நேற்று (டிசம்பர் 30) எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை வருகை தந்தார்.
அப்போது, கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் முற்றுகையிடுவதை அறிந்த செல்வப்பெருந்தகை, உடனே காரில் ஏறிச்செல்ல முற்பட்டார். இதனை அடுத்து, காரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் இருந்து செல்வப்பெருந்தகையை மீட்டு வழியனுப்பி வைத்தனர்.










