Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல் அரசியல்
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • கின்னஸ் சாதனை படைத்தது பரிக்சா பே சர்ச்சா நிகழ்வு; 3.53 கோடி பேர் பதிவு இந்தியா
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்

Posted on February 14, 2025 By admin No Comments on பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான இந்திய வம்சாவளியினர் குவிந்து பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்றனர். ‘பாரத் மாதா கி ஜே’, ‘வந்தே மாதரம்’ என முழங்கியும், ‘மோடி, மோடி’ என கோஷமிட்டும் வரவேற்றனர். இந்த வரவேற்பால் நெகிழ்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி, மனமகிழ்ச்சியுடன் அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அமெரிக்க புலனாய்வுப்பிரிவு தலைவர் துளசி கப்பாட், தொழிலதிபர் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் பிரதமர் மோடி சந்தித்தார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி, அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அப்போது அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள். பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம். உலகின் மிக பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும். எனவே, இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து வரும் போது மிக்கப்பெரிய பலம் பெறும். மனித குலத்தின் நலனுக்காக நாங்கள் பணியாற்றுவோம்’’ என்றார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக் கொள்ள தயார்.

நான் எப்போதும் ரஷ்யா, உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்; இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன். பலரும் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையோடு இருப்பதாக தவறாக நினைக்கிறார்கள், உண்மையில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கிறது.

இது போருக்கான நேரமில்லை என்பதை நான் புதினிடமே தெரிவித்துள்ளேன்; இன்றும் கூட, தீர்வுகளை போர்க்களத்தில் காண முடியாது என்பதே எனது நம்பிக்கை. இரு நாடுகளும் (ரஷ்யா மற்றும் உக்ரைன்) கலந்து கொள்ளும் மன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்படும்போதுதான் போருக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறது.

போர் நிறுத்தத்திற்காக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். கூடிய விரைவில் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்’ என்று பிரதமர் மோடி கூறினார். இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தியா, உலகம் Tags:#Bjp, #Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Next Post: பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்

Related Posts

  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள் உலகம்
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி இந்தியா
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு
  • 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்
  • அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • 5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு
  • ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஜனாதிபதியுடன்  முப்படை தளபதிகள் சந்திப்பு இந்தியா
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு இந்தியா
  • கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம் தமிழ்நாடு
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல்
  • துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme