மறைந்த பிரபல நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலரஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் கடந்த 29ஆம் தேதி நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (மே 30) அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பன்மொழி திரையுலக நட்சத்திரமாகத் திகழ்ந்த, மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்களின் பூதவுடலுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தி வணங்கி மரியாதை செய்தேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் அவர்களும் முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் அவர்களும் உடனிருந்து மரியாதை செலுத்தினர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.