Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை தமிழ்நாடு
  • பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி: அமித்ஷா எச்சரிக்கை இந்தியா
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு

ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை

Posted on February 26, 2025 By admin No Comments on ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை

ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள் என்று கோவை மாவட்ட பாஜக புதிய அலுவலக திறப்பு விழாவில் தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை உரையாற்றியதாவது: நமது புதிய இல்லம், நமது கோவிலை திறப்பதற்காக வந்திருக்கக்கூடிய நமது அன்பை எல்லாம் பெற்றிருக்கக்கூடிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, மேடையில் இருக்கக்கூடிய எல்லாத்தலைவர்களும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டப்பேரவை குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநிலத் தலைவராக இருந்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து இன்றும் அதே வேகத்தோடு வழிநடத்திக் கொண்டிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும தர்மப்போராளி ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மகளிர் அணியின் தேசிய தலைவி வானதி சீனிவாசன், மாநிலத்துணைத்தலைவர்கள் கனகசபாபதி, சக்கரவர்த்தி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ரத்தம் சிந்தி கட்சி வளர்த்த மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் ஐயா வாசுதேவராவ், அவரது மகன் பிரமோதரராவ் தற்போது வந்துள்ளார். முன்னாள் மறைந்த மாவட்ட தலைவர்கள் கே.எஸ்.நடராஜன், பூபதி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு நமது தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். முன்னாள் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் பேசும்போது நமக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் அலுவலகம் இருக்க வேண்டும். அனைத்து மக்களும் நமது கோவிலான அலுவலகத்துக்கு உரிமையோடு வர வேண்டும். அப்படிப்பட்ட கட்டிடம் இருக்க வேண்டும் என்றார்.

இன்றைக்கு நமது கட்டிடத்தை பார்த்தோம் ஆனால் மாவட்ட தலைவரில் இருந்து எல்லோருக்கும் தேவையான அறை மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நமது அலுவலகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் திறந்து வைக்கிறார். எனவே அனைவரின் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று நாம் வேகமாக வளர வேண்டும். நாம் வேகமாக வளர்வதால்தான் நம் மீது கல்லை வீசுகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி தமிழகத்தில் உள்ள மக்களின் மனதில் தங்க ஆரம்பித்து விட்டது. எல்லோருடைய இல்லங்களிலும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குடியிருக்கிறார். எதிர்க்கட்சி நண்பர்களால் மக்களிடையே போக முடியவில்லை, பேச முடியவில்லை. அவர்களின் எந்த ஒரு திட்டமும் கூட மக்களிடையே போக முடியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கஷ்டப்பட்டு சிந்திச்சு ஒரு நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய மருந்தின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி மருந்தகத்தை நாடு முழுவதும் திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டார். அப்படி ஒரு திட்டம் வந்தால் அதற்கும் தடை விதிப்பார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் பிரதம மருந்தகத்தை காப்பி அடிச்சு முதல்வர் மருந்தகம் என்று தொடங்கி வைத்துள்ளார். இதுபோன்ற அநியாயத்தை எங்கேயாவது பார்த்திருப்பீர்களா? நாங்கள் செய்தால் அது குற்றம்? நாங்கள் செய்தால் அதனை மக்களிடம் செல்வதற்கு விட மாட்டீர்கள். அதே பெயரை எடுத்து ஸ்டாலின் பெயரில் வைப்பது எங்களுக்கு சந்தோஷம்தான். உங்கள் பெயரில் ஆவது பிரதமரின் திட்டம் போய் சேர்வது மகிழ்ச்சியே. எங்களை பொறுத்தவரையில் நடுத்தர மக்களுக்கு மருந்துகள் போய் சேரவேண்டும்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பெயரை வைத்து திட்டத்தை தொடங்கவில்லை. மாறாக பிரதமர் மருந்தகம் என்றுதான் தொடங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து தலைவர்களின் பெயரை வைக்காமல் பாரதப் பிரதமர் திட்டம் என்று வந்தபிறகுதான் தமிழகத்தில் ஈவெரா மற்றும் அண்ணா பெயர் குறைந்து முதல்வர் திட்டம் என்ற பெயர் வெளியே வருகிறது.
தமிழகத்தில் கலைஞர் நூலம் என்று பெயர் வைக்கிறவங்க மருந்தகத்திற்கு முதல்வர் மருந்தகம் என்று பெயர் வைத்துள்ளதை பார்த்தால் நாம் ஜெயித்துவிட்டோம் அன்பு சொந்தங்களே. அதை எல்லாம் செய்திருப்பவர் ஒப்பற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான். எனவே இன்று நாம் கடுமையாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கான பரிசு பாஜக தொண்டன் ஏதோ ஒரு இடத்தில் கைது செய்யப்படுகிறான். அந்த கைதுக்கூட இன்முகத்தோடு தொண்டர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். நேற்று ஒருவர் சிறையில் இருந்த வந்தபின்னர் தொலைபேசியில் பேசினேன். அப்போது எப்படி இருக்கீங்க அண்ணே என்றேன். அதற்கு தொண்டர் எந்த பிரச்சனையும் இல்லை நான் சிறைக்கு செல்வதற்கு முன்பாகவே வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்துவிட்டேன் என்றார்.
ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டப்பகலில் கபடம் நாடகம் போடுகிறார். நாம் இந்தியை திணிக்கிறோம் என்று, இப்போதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காசியில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி மூன்றாவது முறையாக நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் திருவள்ளூர் கலாச்சார அரங்கத்தை பிரதமர் திறந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். தமிழை நேசிக்கக்கூடிய ஒரு பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார் என்பது ஒவ்வொரு நாளுக்கான சாட்சி ஆகும்.

நவம்பர் 12, 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு அறிவுரை வழங்கினார். இந்தியாவில் மருத்துவக்கல்வியில் இருந்து தொழில்நுட்பக்கல்வி அனைத்தையும் சொந்த தாய்மொழியில் சொல்லிக்கொடுங்கள் ஸ்டாலின் அவர்களே என உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால் எப்படி அமித்ஷா அவர்கள் இந்தியை திணிப்பார்கள். இதற்கு முன்னர் மத்திய போலீஸ் தேர்வு இந்தி, ஆங்கிலம் மொழியில் இருந்தது. ஆனால் அதனை மாற்றி 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு அமித்ஷா அவர்கள் உத்தரவிட்டார். எனவே ஸ்டாலின் பேசும் பொய்யை இனிமேல் மக்கள் நம்பத்தயாராக இல்லை. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Tamilnadu

Post navigation

Previous Post: நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை
Next Post: தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார்

Related Posts

  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme