Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக விவசாயிகள் குழு இந்தியா
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி இந்தியா
  • சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து இந்தியா

இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Posted on October 13, 2025October 13, 2025 By வ.தங்கவேல் No Comments on இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் மருந்து ஆய்வாளர் வீடுகளில் இன்று (அக்டோபர் 13) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1- 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், ‘டை எத்திலின் கிளைகால்’ என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தான் 22க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதன் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். ‘ஸ்ரீசன்’ நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது.

இந்த நிலையில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் நாகார்ஜூனா 2வது தெருவில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் அபார்ட்மென்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரத்தில் இவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக சோதனை நடத்தாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

அதேவேளையில், அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு உள்ளது. சோதனையின் முடிவில் பல தகவல்கள் வெளியாகும் எனகூறப்படுகிறது.

தமிழ்நாடு Tags:#Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
Next Post: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி

Related Posts

  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம் தமிழ்நாடு
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்
  • திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு
  • அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார் அரசியல்
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme