Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா
  • லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள் உலகம்

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

Posted on November 18, 2025November 18, 2025 By வ.தங்கவேல் No Comments on பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

பாலக்கோடு அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிக்கு உரிய கட்டட வசதி இல்லாததால், கோவில் வளாகம் மற்றும் தெருவில் வகுப்புகள் நடந்து வருவது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட ஜோதிஅள்ளி கிராமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வரை, 4 வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 2018ல் அதிமுக ஆட்சியின்போது மாணவர்களின் நலன் கருதி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வந்தது. இதில் போதுமான வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறை என்ற நிலையில் தற்போது வரை பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தொடக்கப்பள்ளியில் 72 மாணவர்கள், உயர் நிலைப்பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டடம் மட்டும் உள்ளதால், மற்ற மூன்று வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் எதிரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் உயர்நிலைப் பள்ளிக்கும், வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளதால் மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்பறை முன் உள்ள வராண்டா, பள்ளி முன்பு உள்ள தெருவில் மேஜை போடப்பட்டு அதில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஏதுமில்லாததால், கிராம மக்கள் சார்பில் இடம் தேர்வு செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.

கிராம மக்கள் கடந்த 2022ஆம் ஆண்டு பள்ளிக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி பாலக்கோடு பி.டி.ஓ., பெயரில் பத்திரப்பதிவு செய்து ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு கட்டடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்து வந்தனர்.

ஆனால் இன்றுவரை அப்பகுதியில் கட்டடங்கள் கட்ட அனுமதி மற்றும் நிதியை விடியா திமுக அரசு ஒதுக்கவில்லை. மேலும் கோவிலில் செயல்படும் மூன்று வகுப்பறைகளுக்கும் கரும்பலகைகள் வைப்பதற்கு கூட இடமில்லாத அவலநிலை உள்ளது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் மூன்று வகுப்பறைகளும் வராண்டா மற்றும் தெருவில் மூன்று வகுப்பறை என அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஊர் மக்கள் சார்பில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அரசுப்பெயரில் பத்திரப்பதிவும் செய்து கொடுத்தனர். எப்படியும் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு இந்த அரசு புதிய கட்டடம் கட்டிக்கொடுத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இன்றுவரை அங்கு ஒரு துரும்பைக்கூட விடியா அரசு கிள்ளிப்போடவில்லை.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்கிறார். ஆனால் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை விடியா திமுக அரசு என்ன செய்தது? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இதுபோன்ற மக்களுக்கு எதிராக செயல்படும் அவல ஆட்சியை விரட்டி அடித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

வ.தங்கவேல்

தமிழ்நாடு Tags:#nainar nagendran, #Oreynaadu, #School, #Tamilnadu

Post navigation

Previous Post: 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Posts

  • தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு
  • 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்
  • அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • 5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்
  • அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பீகாரில் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு இந்தியா
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி: அமித்ஷா எச்சரிக்கை இந்தியா
  • ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme