---Advertisement---

தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து

On: January 22, 2025 5:56 PM
Follow Us:
---Advertisement---

ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற 25 காவல்துறை அதிகாரிகளுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி, இந்தியக் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும், தமிழகக் காவல்துறை சகோதரர்கள் 25 பேருக்கும், தமிழக பாஜக சார்பாக, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருப்பு வெறுப்பு பாகுபாடின்றி, தேசப் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment