திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளிலும் உட்கட்சி பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கட்சிக்குள் ஆதரவாளர்கள்–எதிர்ப்பாளர்கள் மோதல் உச்சத்துக்கு சென்றுள்ளது. குறிப்பாக, செல்வப்பெருந்தகை அணிக்கு எதிராகவே காங்கிரஸ் தலைவர்கள் பலரும் செயல்படுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வர மறுப்பதாக கூறப்படும் நிலையில், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். ஒருபுறம் ஆதரவாளர்கள் ஆதரவு காட்ட, மறுபுறம் எதிர்ப்பாளர்கள் தோல்வி ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தனது சொந்த தொகுதியைத் தவிர மற்ற இடங்களில் செல்வப்பெருந்தகைக்கு பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது தொகுதியிலேயே எதிர்ப்பு சந்திப்பதால் அவர் அரசியல் அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு பதிவுகளை வெளியிட்டு வருவது கட்சிக்குள் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சிங்காநல்லூர், மேலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட தொகுதிகளில் நிலைமை அதிக பரபரப்பாக மாறியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கூடாரம் முழுவதும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.




