Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல் அரசியல்

தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

Posted on February 14, 2025 By admin No Comments on தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நான்காவது உலகத்தலைவர் ஆவார்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பில் இந்தியா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘எங்கள் பயணம் ஒன்றாக’ (Our Journey Together) என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்த ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ பேரணிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ‘‘மிஸ்டர் பிரதம மந்திரி, நீங்கள் சிறந்தவர்’’ என்று டிட்ரம்ப் அந்த புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டுள்ளார். ‘நமது பயணம் ஒன்றாக’ என்ற இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் டொனால்ட் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் இருந்து கையசைக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

டொனால்ட் டிரம்ப் எழுதிய இந்தப் புத்தகம், அவரது முதல் அதிபர் பதவியின் முக்கிய தருணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் 320 பக்கத் தொகுப்பாகும். 50,000க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்ட ‘‘ஹவுடி மோடி’’ பேரணி 2019 இல் ஹூஸ்டனில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் இருவரும் உரைகளை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2020ல் அகமதாபாத்தில் நடைபெற்ற ‘‘நமஸ்தே டிரம்ப்’’ பேரணியின் போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்க உறவுகளின் மதிப்பை வலியுறுத்தினர். இந்த நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருவரது பிரத்யேக புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

‘எங்கள் பயணம் ஒன்றாக’ புத்தகத்தின் விலை அமேசானில் ரூ.6,000 என்ற விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.6,873 ஆகும். டிரம்ப் ஸ்டோரில் இதன் விலை 100 டாலர்கள் ஆக உள்ளது.

இந்தியா, உலகம் Tags:#Drump, #Oreynaadu, #PM Modi

Post navigation

Previous Post: பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்
Next Post: கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை

Related Posts

  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme