Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Posted on May 23, 2025May 23, 2025 By வ.தங்கவேல் No Comments on தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தமிழகத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22) திறந்து வைத்தார்.

‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள 90 ரயில் நிலையங்களும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-இல் தொடங்கியது.

இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.11.5 கோடி மதிப்பிலும், சூலூர்பேட்டை ரயில் நிலையம் ரூ.14.50 கோடி மதிப்பிலும், சாமல்பட்டி ரயில் நிலையம் ரூ.8 கோடியிலும், மாஹி ரயில் நிலையம் ரூ.18.5 கோடியிலும், வடகரா ரயில் நிலையம் ரூ.24.25 கோடியிலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ.6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியிலும், போளூர் ரயில் நிலையம் ரூ.6.15 கோடியிலும், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ.5.96 கோடியிலும், விருதாசலம் ரயில் நிலையம் ரூ.9.17 கோடியிலும், மன்னார்குடி ரயில் நிலையம் ரூ.4.69 கோடியிலும், சிறயின்கீழு ரயில் நிலையம் ரூ.7 கோடியிலும், குழித்துறை ரயில் நிலையம் ரூ.5.35 கோடி மதிப்பில் என மொத்தம் 13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், முதல்கட்டமாக நாடு முழுவதும் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம், தேஷ்நோக் ரயில் நிலையத்தில் நேரடியாக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அனைத்து ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

மேலும், பிகானீர் – மும்பை இடையே புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரடியாக கலந்துகொண்டனர்.

இந்தியா, தமிழ்நாடு Tags:#Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன்
Next Post: உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!

Related Posts

  • தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme