Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக விவசாயிகள் குழு இந்தியா
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம்

Posted on April 3, 2025April 3, 2025 By வ.தங்கவேல் No Comments on திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம்

திமுக அரசு தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக வேறு செய்திகளை பூதாகரமாக்கி வெளியிட்டு வருகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தருமபுரியில் இன்று (ஏப்ரல் 02) தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று வழிபட்டனர். இதனையடுத்து பாஜகவினர் ஆலய கேட்டின் பூட்டை உடைத்துவிட்டதாக கே.பி.ராமலிங்கம் உட்பட கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர்.

அப்போது, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு அதன் ஊழல்களையும், கூட்டணி கட்சிகள் செய்துள்ள ஊழல்களையும் திசை திருப்புவதற்காக ஏதாவது ஒரு செய்தியை பூதாகரமாக்கி ஊடக விவாதங்களை திட்டமிட்டே பெரிதாக்கி வருகிறது. உதாரணமாக டாஸ்மாக் ஊழல், செல்வப்பெருந்தகை செய்துள்ள ஊழல், அண்ணா பல்கலை பாலியல் வழக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிதி வழங்குவதில் ஊழல் உள்ளிட்ட ஊழல்களை திசை திருப்புதவற்காக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடுவதாகவும் நாடகமாடி வருகிறார்கள். மேலும், மெட்ரிக் பள்ளிகள் மாநில அரசின் தடையில்லா சான்று பெற பள்ளிக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் சங்கம் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறைக்கவே ஊடகங்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது.

உலகம் முழுக்க உள்ள வல்லமையான அரசுகள் எல்லாம் இந்திய பிரதமரின் எண்ணங்களையும், லட்சியங்களையும் பின்பற்றும் வகையிலான அரசாக இந்திய அரசும், தலைவராக மோடியும் உள்ளார். அவர் தமிழகத்தில் நடக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும் நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அதற்காக திமுக-வை எதிர்க்கும் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும். கட்சி நலனை முக்கியமானதாகக் கருதாமல் தமிழகத்தின் நலனை முக்கியமானதாகக் கருதிட வேண்டும். தமிழக மக்களை ஊழல்வாதிகளிடம் இருந்தும், அதிகார துஷ்பிரயோகத்திடம் இருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டும். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். அதையொட்டியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்ற தகவல் பரவியிருக்கலாம். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், தருமபுரி மாவட்ட தலைவர் சி.சரவணன், தர்மபுரி நகரத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர் ஐஸ்வர்யம் முருகன், பாஜக இளைஞர் அணி தலைவர் மௌன குரு, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாடு

Post navigation

Previous Post: தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம்
Next Post: புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Related Posts

  • தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம் நாடு
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு
  • 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme