Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: பாஜக – அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு
  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசிவிட்டு 207 பள்ளிகளை மூடிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன்

Posted on August 12, 2025August 12, 2025 By வ.தங்கவேல் No Comments on தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசிவிட்டு 207 பள்ளிகளை மூடிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன்

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர் என திமுக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளாசினார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தனர். அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். எத்தனை வருடம் கழித்து ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்? 2021ல் அறிவித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தான் கொடுத்தனர்.

இப்போது ஊர், ஊராக என்ன செய்கிறார்கள் என்றால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சொந்த கட்சிக்கு (திமுக) வேலை வாங்குகின்றனர். மூத்த அதிகாரிகளை கட்சி வேலைக்கு அனுப்புவதை பார்க்கும் போது எனக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர். நியமனம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளிகளில் கிடையாது. அதனால் தான் பள்ளிகள் குழந்தைகள் சேருவதே இன்று குறைந்திருக்கிறது.

2 நாட்களுக்கு முன்னர் தேசிய அளவில் ஒரு அறிக்கை வந்து இருக்கிறது. தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் கொடுத்து இருக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜகவினர் யாரும் இல்லை. அந்த மாநிலத்தில் (பீஹார்) 60 லட்சம் வாக்காளர்கள் இல்லை என்று சொல்றாங்க, 20 லட்சம் பேர் இறந்து போய்ட்டாங்க என்று சொல்றாங்க. 30 லட்சம் வாக்காளர்கள் வெளி ஊர்களில் இருக்கிறார்கள்.

ஆணவப் படுகொலை மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து படுகொலைகளாவது மாவட்டத்தில் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.

போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் கஞ்சா. இன்றைக்கு விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய்க்கு கஞ்சா பிடித்துள்ளனர். காவல்துறை சரியாக செயல்படவில்லை. சின்னஞ்சிறிய கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு இருக்கிறது.

ஆட்சிக்கு வந்து எத்தனை வருடம் ஆகிவிட்டது? இப்போது வந்து தாயுமானவர் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே? இன்றைக்கு திமுகவினர் தோல்வி பயத்தில் இருக்கின்றனர். அதனால் இதை எல்லாம் அவர்கள் செய்கின்றனர்.

நிச்சயம் அவர்கள் கூட்டணி 200 இடங்களில் தோற்கும். அதில் சந்தேகமே இல்லை. தோல்வி பயத்தால் எல்லா திட்டங்களையும் திமுகவினர் அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நாகர்கோயில் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் கீழ் 30 சட்டசபை தொகுதிகள் வருகின்றன. திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை தவிர்த்துவிட்டு ஆகஸ்ட் 17ம் தேதி 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

இதை தொடர்ந்து, கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Bjp, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: திருஞானச் செல்வி தியாவை சந்தித்தது மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது; நயினார் நாகேந்திரன்
Next Post: கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம்

Related Posts

  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல் அரசியல்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி
  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் தமிழ்நாடு
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme