Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை தமிழ்நாடு
  • அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி இந்தியா
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி

Posted on October 15, 2025October 15, 2025 By வ.தங்கவேல் No Comments on தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளி நாளில் காலை 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என இந்து விரோத திமுக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க 5 நாட்கள் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குவதாக தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் காலை 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே இந்து விரோத திமுக அரசு அனுமதி வழங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது பட்டாசு விற்கும் விலையில், குழந்தைகள் அதிகநேரம் பட்டாசு வெடிக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் நிலையில், இந்த நாளில் வெடிக்கக் கூடாது, இந்த நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தேவையற்ற கட்டுப்பாடுகளை இந்து விரோத திமுக அரசு திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க திமுக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.

இதனால், பட்டாசு வெடிக்க திமுக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு கட்டுபாடுகள் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என இணைய வாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை என்பது ஹிந்துக்களின் பண்டிகையாக இருந்தாலும், அனைத்து மதத்தவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். பட்டாசு வெடித்து மகிழ்வதை அனைத்து மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் செய்கின்றனர். அந்த வகையில், இது அனைத்து மதத்தவரும் கொண்டாடும் திருவிழா என்று அரசு கருத வேண்டும்.

அந்த அடிப்படையில், இது ஒரு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பண்டிகை. இதை கொண்டாடுவதற்கு, நேரக் கட்டுப்பாடு விதித்து இடையூறு செய்வது, பண்டிகை உணர்வை கெடுப்பது போலவே இருக்கிறது. திமுக அரசு இந்த முடிவை மாற்றிக்கொண்டு பட்டாசு வெடிக்க அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ்நாடு Tags:#Bjp, #Diwali, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Related Posts

  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு
  • ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை தமிழ்நாடு
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • திருஞானச் செல்வி தியாவை சந்தித்தது மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது; நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி
  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம் தமிழ்நாடு
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா
  • மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme