Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்

குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர்

Posted on May 26, 2025May 26, 2025 By வ.தங்கவேல் No Comments on குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர்

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ கர்னல் அதிகாரியான சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பூக்கள் தூவி வரவேற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 26) தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரமதர் மோடி குஜராத்தின் வதோதராவில் இன்று காரில் நின்றவாறு பேரணி சென்றார். அப்போது பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இந்த சமயத்தில் ஆபரேஷன் சிந்தூரில் இடம்பெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் திரண்டு வந்து பிரதமர் நரேந்திர மோடி மீது மலர்தூவி வரவேற்றனர். சோபியா குரேஷியின் தாய் ஹலிமா பிபி, தந்தை தாஜ் முகமது குரேஷி, சகோதரி சைனா சன்ரா,சகோதரர் சஞ்சய் குரேஷி உள்ளிட்டவர்கள் வந்து பிரதமர் மீது மலர்தூவி வரவேற்றனர்.

ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய கர்னல் சோபியா குரேஷி ஆவார். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் சேர்ந்து 2 பெண் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து கள நிலவரம் பற்றி விளக்கம் அளித்தனர். அதில் ஒருவர் தான் ராணுவ கர்னல் சோபியா குரேஷி.

இதுபற்றி சோபியோ குரேஷியின் சகோதரி சைனா சன்ரா கூறுகையில், ‛‛பிரதமர் மோடியுடன் நல்ல சந்திப்பை நடத்தியதாக நாங்கள் நினைக்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க பிரதமர் மோடி பணிகளை மேற்கொண்டு வருகிறார். சோபியா என்னுடைய இரட்டை சகோதரி. அவள் நாட்டுக்காக ஏதாவது செய்யும்போது அது அனைவருக்கும் உத்வேகம் தருகிறது. இனி சோபியா என் சகோதரி அல்ல. இந்த நாட்டுக்கான சகோதரி” என்று பெருமையாக கூறினார்.

சோபியா குரேஷியின் தாய் ஹலிமா பிபி கூறுகையில், ‛‛பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பெண்களான இந்த நாட்டின் சகோதரிகள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மக்கிழ்ச்சி அடைந்துள்ளனர்.’’ இதுபற்றி சோபியா குரேஷியின் தந்தை தாஜ் முகமது குரேஷி கூறுகையில், ‛‛பிரதமர் மோடி எங்களை அங்கீகாரம் செய்தார். அவர் எங்களை வாழ்த்தினார். நாங்களும் அவரை வாழ்த்தினோம்’’ என்றார்.

இந்தியா Tags:#Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன்
Next Post: முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை

Related Posts

  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம்
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme