Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன்

Posted on May 16, 2025May 16, 2025 By வ.தங்கவேல் No Comments on பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன்

‘மீண்டும் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடக்கும்’ என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடி பேரணி நடத்தப்படும் என பாஜக தலைமை அறிவித்தது.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் (மே 15) தேசிய கொடி பேரணி நடந்தது. ரயில் நிலையத்தில் இருந்து மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி வரை பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், தேசியவாதிகள் என பலரும் தேசியை கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பேரணி நடைபெறும். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களுடன் நாங்கள் என்றும் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும் விதமாகவும் தான் இந்த பேரணி நடத்தப்படுகிறது.

நீரும், ரத்தமும் ஒன்றாகாது, யாருக்காகவும் போர் நிறுத்தப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மீண்டும் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

மேலும் இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது; பஹல்காமில் மனிதாபிமானமின்றி 26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, ஆபரேஷன் சிந்தூர் வாயிலாக தக்க பதிலடி கொடுத்து, வெற்றி வாகைசூடிய நமது முப்படைகளையும் கொண்டாடும் வகையில், மூவர்ணக் கொடி ஏந்தி, நமது தமிழக பாஜக சார்பாக திருச்சியில் மாபெரும் யாத்திரை நடத்தப்பட்டது.

நமது பாஜக தேசிய செயலாளரும் மாநில மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைப் பொருளாளர் சிவ சுப்ரமணியம், மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர் சாய் சுரேஷ், திருச்சி நகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, கட்சி  நிர்வாகிகளும், மக்கள் படையும் சூழ வெற்றிப் பேரணி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் நிகழ்வில் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வக்குமார் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

கையில் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று, கார்கில் போரில் நம் தாய்நாட்டை காக்க வீரமரணம் எய்திய ‘வீர் சக்ரா’ மேஜர். எம்.சரவணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு யாத்திரை இனிதே நிறைவுபெற்றது. இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: திமுக ஆட்சியில் குற்றங்கள்
Next Post: போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

Related Posts

  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme