Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார் தமிழ்நாடு
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு

ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை

Posted on September 30, 2025September 30, 2025 By வ.தங்கவேல் No Comments on ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த இடமான வேலுச்சாமி புரத்தில் பாஜக எம்.பி., ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் (செப்டம்பர் 30) நேரடி விசாரணை நடத்தினர். அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்.

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்தது குறித்து உண்மை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவை பாஜக தேசிய தலைமை அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே அறிவித்தபடி கரூரில் தமது ஆய்வை தொடங்கினர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மக்களை சந்தித்து பேசினர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஹேமமாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கரூர் செல்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க உள்ளோம்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க இருக்கிறோம். அதன் பின்னரே என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு தெரிய வரும். அதுதொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்போம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், ஏற்கனவே கரூர் வந்து பார்வையிட்டுச் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏதேனும் சந்தித்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான அனுராக் தாகூர், நாங்கள் நிதியமைச்சரை சந்திக்கவில்லை.

இது 8 பேர் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் குழு. நாங்கள் இங்குள்ள உள்ளூர் மக்களை (கரூர்) சந்திக்க இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம்.

என்ன நடந்தது, எங்கே தப்பு நடந்தது என்று அறிய விரும்புகிறோம். ஒரு முக்கியமான விஷயத்துக்காக இங்கு வந்திருக்கிறோம்.

பின்னர், மாவட்ட நிர்வாகத்தினர், அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திப்போம். அன்றைய நாளில் (செப்டம்பர் 27) என்னதான் நிகழ்ந்தது என்று கேட்டு, அதுதொடர்பான அறிக்கையை எங்கள் கட்சி தேசிய தலைவரிடம் அளிப்போம் என்றார்.

தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: விபத்து நிகழ்ந்த இடத்தை பார்க்க உள்ளனர். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பார்கள், பின்னர், உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் செல்ல இருக்கின்றனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இந்தநிலையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் இன்று (செப்டம்பர் 30) ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தின் போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை அரசு விளக்க வேண்டும். சம்பவ இடத்திற்குச் சென்றபோது எங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெரிய இடம் ஒதுக்கியிருந்தால் இது நடந்திருக்காது.
எங்கள் அறிக்கையை வார இறுதிக்குள் தலைமையிடம் அளிப்போம். 300 பேர் நிற்க முடியாத இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

குழுவின் தலைவர் பாஜக எம்.பி., ஹேமமாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம். பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயம் இல்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.

கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினோம். அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை. தவெகவினர் சிறிய இடத்தை கேட்டிருந்தாலும் அரசு பெரிய இடத்தை தந்திருக்க வேண்டும். இவ்வாறு ஹேமமாலினி கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Karur, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து
Next Post: சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் காண்பது தலைமுறை சுயம்சேவர்களின் அதிர்ஷ்டமாகும்: பிரதமர் மோடி

Related Posts

  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு தமிழ்நாடு
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி
  • திமுக ஆட்சியில் தொடரும் அவலம்; நாமக்கல்லில் பிங்க் கலர் பேருந்து படிக்கட்டு கழன்று விழுந்தது

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை அரசியல்
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme