Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம் நாடு
  • அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா

ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை

Posted on September 30, 2025September 30, 2025 By வ.தங்கவேல் No Comments on ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த இடமான வேலுச்சாமி புரத்தில் பாஜக எம்.பி., ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் (செப்டம்பர் 30) நேரடி விசாரணை நடத்தினர். அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்.

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்தது குறித்து உண்மை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவை பாஜக தேசிய தலைமை அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே அறிவித்தபடி கரூரில் தமது ஆய்வை தொடங்கினர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மக்களை சந்தித்து பேசினர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஹேமமாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கரூர் செல்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க உள்ளோம்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க இருக்கிறோம். அதன் பின்னரே என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு தெரிய வரும். அதுதொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்போம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், ஏற்கனவே கரூர் வந்து பார்வையிட்டுச் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏதேனும் சந்தித்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான அனுராக் தாகூர், நாங்கள் நிதியமைச்சரை சந்திக்கவில்லை.

இது 8 பேர் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் குழு. நாங்கள் இங்குள்ள உள்ளூர் மக்களை (கரூர்) சந்திக்க இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம்.

என்ன நடந்தது, எங்கே தப்பு நடந்தது என்று அறிய விரும்புகிறோம். ஒரு முக்கியமான விஷயத்துக்காக இங்கு வந்திருக்கிறோம்.

பின்னர், மாவட்ட நிர்வாகத்தினர், அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திப்போம். அன்றைய நாளில் (செப்டம்பர் 27) என்னதான் நிகழ்ந்தது என்று கேட்டு, அதுதொடர்பான அறிக்கையை எங்கள் கட்சி தேசிய தலைவரிடம் அளிப்போம் என்றார்.

தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: விபத்து நிகழ்ந்த இடத்தை பார்க்க உள்ளனர். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பார்கள், பின்னர், உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் செல்ல இருக்கின்றனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இந்தநிலையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் இன்று (செப்டம்பர் 30) ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தின் போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை அரசு விளக்க வேண்டும். சம்பவ இடத்திற்குச் சென்றபோது எங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெரிய இடம் ஒதுக்கியிருந்தால் இது நடந்திருக்காது.
எங்கள் அறிக்கையை வார இறுதிக்குள் தலைமையிடம் அளிப்போம். 300 பேர் நிற்க முடியாத இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

குழுவின் தலைவர் பாஜக எம்.பி., ஹேமமாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம். பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயம் இல்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.

கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினோம். அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை. தவெகவினர் சிறிய இடத்தை கேட்டிருந்தாலும் அரசு பெரிய இடத்தை தந்திருக்க வேண்டும். இவ்வாறு ஹேமமாலினி கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Karur, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து
Next Post: சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் காண்பது தலைமுறை சுயம்சேவர்களின் அதிர்ஷ்டமாகும்: பிரதமர் மோடி

Related Posts

  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் தொடரும் அவலம்; நாமக்கல்லில் பிங்க் கலர் பேருந்து படிக்கட்டு கழன்று விழுந்தது தமிழ்நாடு
  • உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்கள் கைது; நள்ளிரவில் போலீசாரை அனுப்பி வீரத்தை காண்பித்த திராவிட மாடல் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்
  • திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு தமிழ்நாடு
  • துணை ஜனாதிபதி தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர் மோடி இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme