மாதிரி தரவு — வடிவமைப்பு முன்னோட்டம்
ஒரே நாடு
முகப்பு
LIVE

2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 7 வரை தமிழ்நாட்டிற்கு மோடி அரசு செய்தவை என்னென்ன?

8 ஜூலை – 7 ஆகஸ்ட் 2026 காலகட்டப் பதிவுகள்.

தமிழக ஆதீனங்களுடன் பிரதமர் மோடி

சமீபத்திய பதிவுகள்

  1. 6 ஆகஸ்ட்

    குடிநீர் கட்டமைப்புக்காக ₹96.52 கோடி — 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு செய்த செலவை மத்திய அரசு திருப்பி வழங்கியுள்ளது.

  2. 6 ஆகஸ்ட்

    பழங்குடியின மக்களின் தொழில்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழிகாட்டி, நிதி உதவி வழங்கி ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு' (Startup TN) இணைக்கப்பட்டுள்ளது.

  3. 1 ஆகஸ்ட்

    முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட ₹4,466 கோடி நிதி — தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசின் வரி பகிர்வில் இருந்து கூடுதல் முன்பணத் தவணையாக இந்தத் தொகையை மோடி அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது.

  4. 22 ஜூலை

    பொதுமக்களுக்கு அடையாள அட்டை தொடர்பான சேவைகள் எளிதில் கிடைக்க, சேலம், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூரில் புதிய பிரத்யேக ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன (14–22 ஜூலை).

  5. 18 ஜூலை

    விருதுநகர் — சம்பா மிளகாய் உற்பத்தி செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, மிளகாய் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு ஆதரவு அளித்துள்ளது.

  6. 17 ஜூலை

    சென்னை பூங்கா (Park), சின்ன சேலம் மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான மேம்பட்ட வசதிகள் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டமைப்புடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

  7. 16 ஜூலை

    தமிழ்நாட்டின் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்காக ₹7,585.49 கோடி இடைக்கால ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் தவணைக்கான ₹2,176.84 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

  8. 16 ஜூலை

    கொளத்தூரில் புதிய அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் வடசென்னைவாசிகளின் வசதிக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது.

  9. 8 ஜூலை

    சந்தையில் விலை வீழ்ச்சியடைவதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருந்து 87,226 மெட்ரிக் டன் கொப்பரைத்தேங்காய் மற்றும் 96,879 மெட்ரிக் டன் தோத்தாபுரி மாம்பழங்களையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.