---Advertisement---

குற்றவாளிகளுக்கு திமுக அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை

On: December 31, 2025 10:34 AM
Follow Us:
---Advertisement---

திருத்தணியில் வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிப்பதால் தான் இப்படி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது என முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர் சுராஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், திருத்தணியில் நேற்று மற்றொரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜமால் என்ற உள்ளூர் தொழிலதிபர், எந்தவித காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது.

சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் கீழ், பொதுப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தனது முழுமையான தோல்வியை திமுக ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment