‘மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி’ பாடல் பாடி அபுதாபியில் இந்தியர்கள் உற்சாகம்!

அபுதாபியில் இந்திய வம்சாவளி மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்காக ‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்ற பாடலை பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

அரபு நாடான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 14) திறந்து வைக்கிறார். அதற்காக அவர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு ‘அஹ்லான் மோடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வணக்கம் மற்றும் வரவேற்பு என்பது அரபு மொழியில் அஹ்லான் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்காக, இந்திய வம்சாவளி மக்கள் ‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்ற பாடலை பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

‘பார் பார் சாஹியே மோடி ஜி’ என்பதற்கு 2மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி’ என்பதே அர்த்தம். இந்த பாடலை பாடி இந்திய வம்சாவளி மக்கள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top